February 5, 2010

"மனிதனின் சந்தேகங்களும் அதற்குரிய விடைகளும் "

இந்த நவீன, நாகரிக உலகத்தில் மனிதனுக்கு அல்லாஹ்வின் கட்டளை,சட்டங்கள் அவனின் குணாதிசயங்கள் பற்றி இந்த சந்தேகங்கள் வருவதற்கு சாத்தியம் இல்லாவிட்டாலும்,சராசரி பாமர மக்களுக்கு இவ்வித சந்தேகங்களுக்கு,சரியான பதில்கள் கொடுக்க வேண்டியது அறிந்த ஒவ்வொரு முஸ்லிம்களுக்கும் கடமையாகிவிட்டபடியால்,சில சந்தேகங்களும் அதற்கு அல்குரான் அடிப்படையில் விடைகளும் கீழே தரப்படுகின்றது.

மனிதன் கேட்கிறான், "இந்த அடையாளங்கள்,பிரபஞ்சங்கள், வானம், பூமி ,இதனுள் உள்ள உயிரினங்கள் இவை எல்லாம் படைத்தவன் அல்லாஹ் என்கிறீர்கள்?,,சரி! உலகத்தை எடுத்துக் கொள்வோம், இங்கு,எல்லா உயிரினங்களையும் படைத்து,அதற்குரிய உணவு வகைகளையும் படைத்து குறிப்பாக மனிதனையும், அவனுக்கு வேண்டிய அறிவையும் தந்து, எல்லாப் படைப்புகளையும் விட அவனுக்கு பெரிய அந்தஸ்தையும் தந்து வாழவைத்தான் , இருந்தும் ஏன் அல்லாஹ் எல்லா மனிதர்களுக்கு ஒரே மார்க்கத்தை தரவில்லை...?ஏன் சிலரை மேலானவர்களாகவும் , பலரை கீழானவர்கலாகவும், நடமாடவிடவேண்டும்?சிலர் பிறப்பால் சரியான மார்க்கம் உள்ள தாய் தந்தையிடம் தோன்றி அதில் திளைகின்றார்கள், சிலர் அறிவே இல்லாத மக்களிடம் பிறக்கின்றார்கள். முன்னர்,காட்டியவர் நேரான மார்க்கத்தில் வருவதால் அது அவரின் பங்கா?...அன்றி அவரின் பிறப்பால் வந்த பயனா? பின்னே கூறியவர் அறிவில்லாத கூட்டத்தில் பிறந்தால் அது அவரின் பங்கா?..அன்றி அவரின் பிறப்பால் வந்த தீமையா? மேலும் உண்மையான மார்க்கத்தைக் கடைப்பிடிப்பவரை விட நிராகரிப்பவர்களும் இணைவைப்பவர்களும் நல்ல நிலைமைகளில் உள்ளார்களே... சிலருக்கு அன்றுட வயிற்றுப்பாட்டை கவனிக்கவோ நேரமில்லாத போடு...இறைவனை நினைக்க, சிந்தனை செய்ய எப்படி நேரம் வரும்? ஆக,, இப்படி ஏழ்மையில் ,உள்ளவர்களை இந்த நிலைமைக்கு ஆளாக்கியது யார் செயல்? மனிதனின் அவன் பிறப்பதற்கு முன் முதல் அவன் இறக்கும் வரை மேலும்,இறந்த பின்னும் அவனுக்கு நரகமா அன்றி சுவனமா?...என்பது வரை இறைவன் அவனுடைய பதிவு புத்தகத்தில் (லவ்ஹுல் மக்பூல்) எழுதிவைத்துவிட்டான் என்கிறானே அப்படி என்றால் ஏன் மனிதன் செய்யும் செயல்களுக்கு அல்லாஹ் கேள்வி கேட்க வேண்டும்?படைக்கப்பட்ட ஜீவராசிகளுக்கு உணவளிப்பது தனக்கு கடமை என்று இறைவன் கூறுகின்றான் அப்படியானால் உலகில் சில இடங்களில் பட்னி சாவு ஏற்படுகின்றதே ஏன்? ஆக, இத்தகைய கேள்விகளுக்கு சரியான பதிலை வேண்டுகிறோம்!"

மேற்கண்டவை மனிதனின் மனம் கேட்கும் கேள்வி ,இதற்குரிய பதில்கள்...அல்குரனின் அடிப்படையில் தரப்படுகின்றது....(இன்ஷா அல்லாஹ் நாளை தொடரும்...)

No comments:

Post a Comment