February 11, 2009

நட்பு

எவனுடைய கையில் என் உயி இருக்கிறதோ அவன் மீது ஆணையாக, நீங்கள் நம்பிக்கை கொள்ளாதவரையில் சுவனபதி செல்ல இயலாது. உங்களில் ஒருவர் மற்றவரை நேசிக்காதவரை நம்பிக்கையாளராகவும் இயலாது. எனவே நான் உங்களுக்கு கூறுகிறேன். அதனை நீங்கள் மேகொண்டால் ஒருவர் மற்றவருக்கு நீங்கள் நேசமுள்ளவராக ஆகிவிடுவீர்கள். அதாவது, உங்களுக்கிடையில் ஸலாம் கூறுவதை பழக்கத்தில் கொண்டுவாருங்கள் என்று நபி அவர்கள் கூறினர். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ

எனக்காக நட்புக்கொண்டவர்கள் எங்கே? இன்று நான் அவர்களுக்கு என்னுடைய நிழலில் இடமளிப்பேன். இன்று என்னுடைய நிழலைத்தவிர வேறு நிழல் கிடையாது என்று மறுமை நாளில் இறைவன் கூறுவான் என நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா நூல்: முஸ்லிம் முஅத்தா

எனக்காக நட்பு கொள்பவர்கள் மீதும் எனக்காக (மார்க்க உரையாடல்) அமர்பவர்கள் மீதும் எனக்காக ஒருவர் மற்றவரைச் சந்திக்கச் செல்பவர்கள் மீதும் எனக்காககச் செலவழிப்பவர்கள் மீதும் என் அன்பு கடமையாகிவிட்டது. என்று இறைவன் கூறியதாக நபி அவர்கள் கூறினர். அறிவிப்பவர்: அபூ இத்ரீஸில் கவ்லான் முஆது (ரலி) முலம் அறிந்து நூல்:முஅத்தா

அல்லாஹ்வுக்காக நட்புக்கொள்வதும் அல்லாஹ்வுக்காக சினமுறுவதும் (நம்பிக்கையாளரின்) மேலான செயல்களாகும் என நபி அவர்கள் கூறினர். அறிவிப்பவர்: அபூசர் (ரலி) நூல்: அபூதாவூத்

அல்லாஹ்வுடைய அடியார்களில் சிலர் நபிமார்களும் அல்ல, தியாகிகளூம் அல்ல. மறுமை நாளில் இறைவனிடம் அவர்களுக்குள்ள பதவிகளைக் கண்டு நபிமார்களும், தியாகிகளும் பொறாமைக் கொள்வர். என்று நபி கூறினர். (அப்பொழுது) அவர்கள் யார்? என்று எங்களுக்கு அறிவியுங்கள் என்று தோழர்கள் கேட்டனர். (அதற்கு) நபி அல்லாஹ்வின் பொருத்தத்திற்காகவே தங்களிடையே நட்புக்கொள்வர். அவர்களுக்கிடையில் உறவின் முறையும் இருக்காது. பணத்திற்காகவும் அவர்கள் நட்புக் கொள்ள மாட்டார்கள். இறைவன்மீது ஆணையாக அவர்களின் முகம் ஒளிர்ந்து கொண்டிருக்கும். அவர்கள் இறை வழியில் செல்வார்கள். மக்கள் அச்சமுறும் பொழுதும், துக்கிக்கும் பொழுதும் அவர்கள் அச்சமுறவும் மாட்டார்கள். துக்கிக்கவும் மாட்டார்கள். ".(முஃமின்களே!) அறிந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ்வின் நேயர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்." என்ற 10:62 வது வசனத்தை ஓதினர். அறிவிப்பவர்: உமர்(ரலி) நூல்: அபூதாவூத்

உங்களில் ஒருவர் தம் சகோதரர்மீது அன்பு கொண்டால், தாம் அவர்மீது அன்பு கொண்டிருப்பதாக அவரிடம் அறிவித்து விடவும். என நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: மிக்தாம் இப்னு மஃதீகர்பு (ரலி) நூல்: அபூதாவூத், திர்மிதீ


No comments:

Post a Comment