October 30, 2009

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் உங்களுக்கு மிகச் சிறந்த தர்மம் ஒன்றைக் கூறட்டுமா? அது, தனக்குப் பொருளீட்டி உணவளிக்கக்கூடியவர் வேறு எவருமில்லை என்ற நிலையில் உன் பக்கம் அனுப்பப்பட்ட உன் மகள்தான். ; ( இப்னு மாஜா)

நான் அண்ணலாரிடம் கேட்டேன்: எனக்கும் இரண்டு அண்டை வீட்டுக்காரர்கள் உள்ளனர். அவர்களில் எவருக்கும் நான் அன்பளிப்பு அனுப்புவது? ; அண்ணலார் பதிலளித்தார்கள். எவருடைய வாசல் உன் வாசலுக்கு மிக அருகில் உள்ளதோ அந்த அண்டைவீட்டுக்காரருக்கு! அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி) (புகாரி)


நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்: உங்களில் ஒருவரின் பணியாள் உணவு சமைத்து, அந்த உணவைச் சமைப்பதற்காக வெப்பம், புகை ஆகிய சிரமங்களைச் சகித்துக் கொண்டு, அந்த உணவை அவரிடம் கொண்டு வருகிறான் எனில், எஜமான் அவனைத் தன்னுடன் உட்கார வைத்துக்கொண்டு (இருவரும் சேர்ந்து) உண்ணட்டும்! உணவு குறைவாக இருந்தால், அதிலிருந்து ஒரு கவளம் அல்லது இரண்டு கவளம் அவனுடைய கையில் விடட்டும்! அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) (முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரர் ஆவார். அவர் தன் சகோதரனுக்குக் கொடுமை புரிவதுமில்லை, அவனை ஆதரவின்றி விட்டு விடுவதுமில்லை. எவர் தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்கின்றாரோ அவரது தேவையை அல்லாஹ் நிறைவு செய்கின்றான். எவர் ஒரு முஸ்லிமின் துன்பத்தை நீக்குகின்றாரோ மறுமைநாளில் அல்லாஹ் அவருடைய துன்பத்தை நீக்குவான். எவர் ஒரு முஸ்லிமின் குறையை மறைக்கின்றாரோ மறுமைநாளில் அல்லாஹ் அவருடைய குறைகளை மறைப்பான். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) (புகாரி, முஸ்லிம்)

October 28, 2009

மனிதனுக்குரிய நன்மை அல்லாஹ்வுடைய விதியின் மீது திருப்தியுறுவதாகும். மனிதனுக்குறிய தீமை அவன் அல்லாஹ்விடம் நன்மையைக் கோருவதைக் கைவிடுவதாகும். மேலும் மனிதனுக்குரிய தீமை அவன் அல்லாஹ்வுடைய விதியைக் கொண்டு அதிருப்தியுறுவதாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸஃதுப்னு அபீவக்காஸ் (ரலி) நூல்: திர்மிதி

October 27, 2009

அல்லாஹ்வின் நல்லடியார்களே!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...

எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே!!!

இந்த இணையதளத்தில் வெளியிட்டவைகள் read islam என்ற இணையதளத்தில் எடுக்கப்பட்டவை,நன்றி read islam ...உங்கள் பார்வையில் முக்கியமானதை முன்வைத்துள்ளேன்,என்னுடைய முயற்சிக்காக துஆ செய்து கொள்ளுங்கள்...அல்லாஹ் உங்கள் அனைவருக்கும் நல் அருள் புரிவானாக!!! ஆமீன்....

October 23, 2009

இறை மொழிகள்

அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

*இறை நம்பிக்கையாளர்களே!எந்த ஆண்களும் மற்றெந்த ஆண்களையும் பரிகாசம் செய்ய வேண்டாம். ஒரு வேளை,அவர்கள் இவர்களைவிட (அல்லாஹ்விடத்தில்) சிறந்தவர்களாக இருக்கலாம். எந்த பெண்ணும், மற்றெந்த பெண்களையும் பரிகாசம் செய்ய வேண்டாம்.ஒரு வேளை,அவர்கள் இவர்களைவிட (அல்லாஹ்விடத்தில்) சிறந்தவர்களாக இருக்கலாம்.(அல் குரான் 49:11)

October 21, 2009

முனாFபிக்

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவர்களே முனாபிக்குகள். தன்னைப் போன்று பரிசுத்தமானவர் என்று நம்பக் கூடிய வகையில் நடப்பவர்கள் வேஷம் போட்டு மோசம் செய்பவர்கள்.

சமுதாய மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியில் வல்லவர்கள் சுருக்கமாகச் சொன்னால் சைத்தானின் எடுபிடிகளே நயவஞ்சகர்கள். þந்நயவஞ்சகர்களின் அடாவடித்தனத்தை முனாFபிக்கூன் என்ற அத்தியாத்தில் அல்லாஹ் படம் பிடித்து காட்டுகிறான். þவர்களின் அடையாளங்கள் குறித்து நபி(ஸல்) அவர்கள் கூறும்போது யாரிடம் நான்கு குணங்கள் உள்ளனவோ அவன் முழு நயவஞ்சகன். அவைகளாவன 1. கொடுத்தால் வாக்குறுதியை மீறுவான் 2. அமானிதத்தை மோசடி செய்வான் 3. பேசினால் பொய்யே பேசுவான். 4. சண்டையிடும் போது þழி மொழியில் வசைமாறி பொழிவான். அறிவிப்பவர்:அப்துல்லாஹ் பின் அம்ரு(ரலி) நூல்:முஸ்லிம், புகாரி மேலும் þந்நயவஞ்சகத் தன்மை படைத்தவர்களைப் பற்றி நபி(ஸல்) அவர்கள் மனிதர்களின் மிகக் கெட்டவர்கள் þரு முகங்களையுடைவனாவான். þங்கொரு முகத்தைக் கொண்டு வருவான். அங்கொரு முகத்தைக் கொண்டு வருவான். என்று கூறினார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம் முனாFபிக்கை முனாFபிக் என்று கூறலாமா? வெறுக்கலாமா? பனூஹாஸிம் என்ற தன்னுடைய சமூகத்திற்கு தனது வீட்டில் தொழுகை நடத்த ஒரு þடத்தை தேர்ந்து எடுக்க நபி(ஸல்) அவர்களை þத்பான்பின் மாலிக்(ரலி) அவர்கள் விருந்து சமைத்து அழைத்தார்கள். நபி (ஸல்) அவர்கள் வந்ததைக் கேள்விப்பட்ட அங்குள்ள மக்கள் þத்பான்(ரலி) வீட்டில் கூடினார்கள். மாலிக்பின் துவைஸின் மட்டும் வரவில்லை. அங்கு கூடியிருந்த மனிதர்களில் ஒருவர் மாலிக் ஏன் வரவில்லை என்று கேட்டார். மற்றொரு மனிதர் அவர் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நேசிக்காத ஒரு முனாFபிக் என்று கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள் அவ்வாறு கூறாதே! அவர் அல்லாஹ்வின் திருப்தியை நாடி லாயிலாஹ þல்லல்லாஹ் என்று கூறியதை நீர் அறிய மாட்டீரா? என்று கேட்டார்கள். அதற்கு அம்மனிதர் அல்லாஹ்வும் அவனது தூதருமே நன்கறிந்தவர்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக அவரது நேசமும், அவரது உரையாடலும் முனாFபிக்குகளிடமே þருப்பதை நாங்கள் பார்க்கிறோம் என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் திருப்தியை நாடி யார் லாயிலாஹ þல்லல்லாஹூ சொல்கிறாரோ அவருக்கு நரகை அல்லாஹ் ஹராமாக்கி விட்டான் என்று குறிப்பிட்டார்கள். மேலும் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என மக்கள் கூறும் வரை அவர்களோடு போராட வேண்டும் என்று நான் ஏவ்ப்பட்டுள்ளேன். அந்த கலிமாவை கூறி, நமது தொழுகையைத் தொழுது, நமது கிப்லாவை முன்னோக்கி, நாம் அறுப்பது போல் அறுத்து வருவார்களானால் தக்க காரணமின்றி அவர்களுடைய உயிர், பொருளுக்குச் சேதம் ஏற்படுத்துவது நமக்கு விலக்கப்பட்டுள்ளது. அவர்களுடைய விசாரணை அல்லாஹ்வின் நாட்டத்தைப் பொருத்ததாகும். அனஸ்(ரலி) அறிவிக்கும் þந்த ஹதீஸ் புகாரியில் þடம்பெற்றுள்ளது. எனவே அல்லாஹ்வின் நல்லடியார்களே! வெளிப்படையாக ஒரு முஸ்லிமின் நயவஞ்சகச் செயல்களை அறிந்து விடினும் அம்முஸ்லிமை முனாFபிக் என்று சொல்ல வேண்டாம். ஏனெனில் அல்லாஹ்வின் திருப்தியை நாடி கலிமா சொன்னாரா þல்லையா என்பதை நாம் அறிய முடியாது. þது மறைவான அல்லாஹ் மட்டுமே அறியும் விஷயம். எனவே அந்த வல்ல அல்லாஹ்விடம் பொறுப்பைக் விட்டு விட்டு அச்சகோதரர்களை வெறுக்காமல் அன்போடு பழகி, பண்போடு பேசி ஒற்றுமையுடன் வாழ்வோமாக.

பொருப்பாளர்கள்

அல்லாஹ்வின் விதி விலக்குகளை வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் பின்பற்ற வேண்டும் என்று முதலில் எனக்கும் பின்பு உங்களுக்கும் உபதேசம் செய்கின்றேன்.

முஃமின்களே! உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்; அதன் எரிபொருள் மனிதர்களும், கல்லுமேயாகும்; அதில் கடுமையான பலசாலிகளான மலக்குகள் (காவல்) இருக்கின்றனர், அல்லாஹ் அவர்களை ஏவி எதிலும் அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள், தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்து வருவார்கள். அல்குர்ஆன் 66:6

தாய், தந்தையர் தங்களுடைய பிள்ளைகளின் மீது எவ்வளவு கருணையும் பாசமும் காட்டுகின்றனர். தங்களுடைய பிள்ளைகளின் சுக துக்கத்திற்காகவே தங்களை மாற்றிக்கொண்டவர்கள் எத்தனைபேர்? தன்னுடைய மகனுக்கு மகளுக்கு ஒரு வயதில் என்ன உணவு கொடுக்கவேண்டும் என்பதிலிருந்து அவர்களின் வருங்கால வாழ்க்கை எப்படியெல்லாம் இருக்கவேண்டும் என்பது வரை தீர்மானித்து வைத்து இருக்கின்றனர். அவர்கள் எந்தத் துறையில் ஆர்வமாய் இருக்கின்றார்களோ அவற்றில் அவர்களின் ஆர்வத்தை தூண்டிவிடுகின்றனர். தன் மகன் மகள் இலட்சியத்தை அடையும்வரை போராடுகின்றனர்.

ஆனால் வாழ்க்கையின் மிக முக்கியமான இம்மையிலும் மறுமையிலும் வெற்றியைத் தேடித்தருகின்ற காரியத்தைச் செய்யச் சொல்வதில் அவர்கள் மறந்து விடுகின்றனர். தங்களின் மகனின் மகளின் உற்றார் உறவினர்களின் சுகதுக்கத்தில் பங்கு கொள்கின்ற நாம் அவர்களுக்கு ஒரு துன்பம் என்றால் எவ்வளவு வேதனைப்படுகிறோம். ஆனால் தன் மகன் மகள் உற்றார் உறவினர்கள் ஒரே இறைவனை வணங்காமல் இறைவனின் ஏவல் விலக்கல்களை ஏற்காமல் வாழ்கின்றார்களே அவர்களை நேர்வழியில் கொண்டுவர முயற்சி செய்திருக்கிறோமா? இல்லை அவர்கள் செய்யும் அனாச்சாரங்களை விட்டாவது விலகி இருக்கின்றோமா?

உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளரும், பாதுகாவலரும் ஆவார். உங்களில் ஒவ்வொருவரும் அவரது கண்காணிப்பின் பொறுப்பின் கீழ் உள்ளவர்களைப் பற்றி கேட்கப்படுவார். அறிவிப்பாளர்: இப்னுஉமர் நூல்:புகாரி, முஸ்லிம்

பெரும்பாலான தாய் தந்தையர்கள் தம் பிள்ளைகள் குடும்பத்திற்காகவே வாழ்கின்றனர். அவர்களின் இம்மையின் வருங்காலம் பிரகாசமாக இருக்கவேண்டும் என்பதற்காகவே பாடுபடுகின்றனர். தன் பிள்ளைகளை கண்காணித்துக்கொண்டே இருக்கின்றனர்.

நாளை தேர்வு உண்டே படிக்கவில்லையா? என்று தன் பிள்ளைகளிடம் கேட்கும் பொறுப்பாளர்களே! நாளை உங்கள் பிள்ளைகளுக்கு மட்டுமல்ல, உங்களுக்கும் தேர்வு உண்டே அதற்கு தயாராகி விட்டீர்களா? உங்களை தயார் படுத்திக் கொண்டீர்களா?

பொறுப்பாளர்கள் தன் மகன் மகள் இறைவனின் அருட்கொடைகளை எண்ணி மகத்தான இறைவனுக்கு வழிபடுகின்றனரா? இல்லை, மகத்தான இறைவனின் அருட்கொடைகளை புறக்கனிக்கின்றனரா? ஒரே இறைவனை மட்டும்தான் வணங்கவேண்டும் என்பதை அவர்கள் அறியவில்லை. அறிந்திருந்தாலும் அதை அவர்கள் வெளிப்படுத்தவில்லை. லுக்மான்(அலை) தன் மகனுக்கு உபதேசம் செய்வதைப் பாருங்கள். லுக்மான்(அலை) உபதேசம் செய்தது மாதிரி நீங்கள் உபதேசம் செய்தீர்களா?

இன்னும் லுஃக்மான் தம் புதல்வருக்கு; ''என் அருமை மகனே! நீ அல்லாஹ்வுக்கு இணை வைக்காதே; நிச்சயமாக இணை வைத்தல் மிகப் பெரும் அநியாயமாகும்," என்று நல்லுபதேசம் செய்து கூறியதை (நினைவுபடுத்துவீராக) அல்குர்ஆன் 31:13

பொறுப்பாளர்கள் தம் பிள்ளைகள் பரிட்சையில் மதிப்பெண் குறைத்து வாங்கிவிட்டால் உடனே கோபப்பட்டு அடிக்கின்றீர்கள். ஆனால் தன் பிள்ளைகள் 10 வயது அடைந்த பிறகும் தொழாமல் இருப்பதற்கு எத்தனை பொறுப்பாளர்கள் உங்களது பிள்ளைகளை அடித்தீர்கள் என்று நெஞ்சில் கைவைத்து சொல்லுங்கள். லுக்மான்(அலை) உபதேசம் செய்ததைப் பாருங்கள்.

(லுஃக்மான் தம் புதல்வரிடம்) என் அருமை மகனே! (நன்மையோ, தீமையோ) அது ஒரு கடுகின் சித்து அளவே எடையுள்ளது ஆயினும்; அது கற்பாறைக்குள் இருந்தாலும் அல்லது வானங்களில் இருந்தாலும், அல்லது பூமிக்குள்ளே இருந்தாலும் அல்லாஹ் அதையும் (வெளியே) கொண்டு வருவான்; நிச்சயமாக அல்லாஹ் நுண்ணறிவு மிக்கவன்; (ஒவ்வொன்றின் அந்தரங்கத்தையும்) நன்கறிபவன். அல்குர்ஆன் 31:16

''என் அருமை மகனே! நீ தொழுகையை நிலை நாட்டுவாயாக நன்மையை ஏவி, தீமையை விட்டும் (மனிதர்களை) விலக்குவாயாக உனக்கு ஏற்படும் கஷ்டங்களைப் பொறுத்துக் கொள்வாயாக நிச்சயமாக இதுவே வீரமுள்ள செயல்களில் உள்ளதாகும். அல்குர்ஆன் 31:17

இவ்வாறு பெற்றோர்கள் மிக முக்கியமாக இஸ்லாமிய போதனைகளை படித்து கொடுக்காமல் இம்மையை நினைவுபடுத்தி மறுமையை நினைவூட்டவில்லையானால் தங்கள் பிள்ளைகள் மறுமையில் நஷ்டமே அடைவார்கள்.

அந்த நாளில் மனிதன் விரண்டு ஓடுவான் தன் சகோதரனை விட்டும் - தன் தாயை விட்டும், தன் தந்தையை விட்டும்; தன் மனைவியை விட்டும், தன் மக்களை விட்டும் அன்று ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் (அவல) நிலையே போதுமானதாயிருக்கும். அல்குர்ஆன் 80:34-37

(அனுதாபமுடையவனாக இருந்த) ஒரு நண்பன் மற்றொரு நண்பனை பற்றி (அனுதாபத்துடன்) விசாரிக்கமாட்டான். அவர்கள் நேருக்கு நேர் காண்பார்கள், (ஆனால் விசாரித்துக் கொள்ள மாட்டார்கள்); அந்நாளின் வேதனைக்கு ஈடாகக் குற்றவாளி ஈடுகொடுக்கப் பிரியப்படுவான்: தன் மக்களையும்- தன் மனைவியையும், தன் சகோதரனையும்- அவனை அரவணைத்துக் கொண்டிருந்த அவனுடைய சுற்றத்தாரையும்- இன்னும் பூமியிலுள்ள அனைவரையும் (ஈடுகொடுத்துத்) தன்னைக் காப்பாற்றிக் கொள்ள (பிரியப்படுவான்). அல்குர்ஆன் 70:10-14

ஆகவே நாம் இறைவன் ஒருவனையே வணங்கி அவனுடைய தூதரை மட்டுமே நமது வழிகாட்டியாக எண்ணி செயல்பட்டு நமது பிள்ளைகளுக்கும், உறவினர்களூக்கும் உபதேசம் செய்து வாழ அல்லாஹ் கிருபை செய்வானாக!

October 13, 2009

ஹிந்துக்களின் வேதாகமத்தில் சொல்லப்படும், கடைசி அவதாரமான கல்கி

ஹிந்துக்களின் வேதாகமத்தில் சொல்லப்படும், கடைசி அவதாரமான கல்கி, இறைதூதர் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மதாவார்.இதை நான் சொல்லவில்லை, சமீபத்தில் ஹிந்தி மொழியில் வெளிவந்த புத்தகத்தின் சாராம்சமாகும். இந்த நூல் வெளியானபின், இந்தியாவே ஒரு கலங்கு கலங்கி விட்டது என்றால் மிகையல்ல. இதை ஒரு இஸ்லாமியர் எழுதியிருந்தால், அவர் இந்நேரம் சிறையிலடைக்கப்பட்டிருப்பதோடு, அந்த புத்தகத்தையும் தடை செய்திருப்பார்கள்.

ஆனால், கல்கி அவதாரத்தைப் பற்றிய இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு, “பிரபஞ்ச இறைத்தூதின் வழிகாட்டி” என்னும் இந்த புத்தகம், வங்காளத்தில் இருந்து வெளிவந்ததாகும்.

இது அலஹாபாத் பல்கலைக்கழகத்தில் ஒரு முக்கிய அத்தாட்சியாக இருக்கிறது. இதை எழுதியது, தலைசிறந்த ஆய்வாளரான பண்டிட் வைத் ப்ரகாஷ் என்னும், ஒரு பிராமண சமஸ்கிருத பண்டிட்டாவார்.

பண்டிட் வைத் ப்ரகாஷ, பன்னெடுங்கால கடின ஆராய்ச்சி மற்றும் அயரா உழைப்பில் உருவான இப்புத்தகத்தை, இதே போல ஆய்வு செய்யும் எட்டு கல்விமான்களிடம் சமர்ப்பித்து இருக்கிறார். அவர்களும், முழுக்க இப்புத்தகத்தை படித்துணர்ந்து, பலமான ஆதாரங்களினால், இப்புத்தகத்தின் தகவல், முழுக்க முழுக்க உண்மை தான் என்று சான்றளித்துள்ளனர்.

இந்தியாவின் தலைச்சிறந்த வேதங்கள், குறிப்பிடும் தூதரும் வழிகாட்டியுமான கல்கி அவதாரம், மக்காவில் பிறந்த முஹம்மது என்னும் மாமனிதரே ஆவார். ஆதனால், ஹிந்துக்கள், இனியும் கல்கி அவதாரத்துக்காக காத்திராமல், ஆயிரத்து நானூறு வருடங்களுக்கு முன்பு, இவ்வுலகில் உதித்து, இறைத்தூதை எத்தி வைத்து, வாழ்வின் இறுதிவரை இறைபணியாற்றிய இறைவனின் கடைசி தூதரை ஏற்று இஸ்லாத்தைத் தழுவ வேண்டும். இவரது ஆராய்ச்சியின் இறையாண்மையை நிரூபிக்க, பண்டிட், தம் வேதத்திலிருந்து தக்க சான்றுகளை முன்வைக்கிறார்.

1.வேதங்கள், கல்கி அவதாரம் தான், பகவானின் இறுதித் தூதர் என்கிறது. இது, கடைசி தூதர், முஹம்மதுடைய விஷயத்தில் மட்டுமே சரியாக இருக்க முடியும்.

2.ஹிந்து வேதங்களின் முன்னறிவிப்பின் படி, கல்கி நீரினால் சூழப்பட்ட ஒரு இடத்தில் தான் அவதாரம் எடுப்பார். அது தான் ‘ஜஸீரத்துல் அரப்’ என்று சொல்லக் கூடிய கடலால் சூழப்பட்ட அரேபிய தீபகற்பமாகும்.

3.ஹிந்து புனித நூல்களில், கல்கி அவதாரத்தின் தந்தையை, விஷ்னு பகத் என்றும் தாயை சொமானிப் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சமஸ்கிருதத்தில் விஷ்னு என்றால், இறைவன், அதாவது அல்லாஹ் என்று பொருள். அதோடு, பகத் என்றால் அடிமை என்று அர்த்தம்.ஆக, விஷ்னு பகத் என்பது, அல்லாஹ்வின் அடிமை அதாவது அரபியில், அப்துல்லாஹ் என்னும் பதத்தைத் தருகிறது. சொமானிப் என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு, சாந்தமான அமைதி என்று பொருள். அரபியில் ஆமினா என்ற வார்த்தைக்கும் இதே அர்த்தம் தான். ஆக, இறுதித் தூதர் முஹம்மதின் பெற்றோர் அப்துல்லாஹ் மற்றும் ஆமினா என்பது, உறுதிப்படுகிறது.

4.அதோடு, கல்கி அவதாரம், ஆலிவ் மற்றும் பேரித்தங்கனிகளை உண்டு வாழ்வார் என்றும், வார்த்தை தவறாத நேர்மையாளராக இருப்பார் என்றும் ஹிந்துக்களின் புத்தகங்களில் உள்ளது. ஆக, இது முஹம்மதின் விஷயத்தில் உண்மையாகிறது என்பதாக பண்டிட் ப்ரகாஷ் எழுதுகிறார்.

5.கல்கி அவதாரம் உயர்ந்த மதிப்பு மிக்க குலத்தில் பிறப்பார் என்று வேதங்கள் சொல்கின்றன. இதுவும், மிக உயரிய, மதிப்புமிக்க குறைஷி குலத்தில் பிறந்ததால், முஹம்மதுடைய விஷயத்தில் சரியாகிறது.

6.கல்கி அவதாரத்துக்கு, ஒரு குகையில் இறைவனின் ஏவலர் மூலமாக ஞானம் கிடைக்கும் என்பதாக வந்துள்ளது. ஆக, மக்காவிலேயே, அல்லாஹ்வின் தூதர் ஜிப்ரீல் மூலமாக ஹீரா குகையில் ஞானம் பெற்றது முஹம்மது ஒருவர் தான்.

7.மேலும், கல்கி அவதாரத்துக்கு காற்றின் வேகத்தில் பறக்கும் குதிரை வழங்கப்படுமென்றும், அதன் மூலம் அவர், இவ்வுலகத்தையும், ஏழு வானத்தையும் சுற்றி வருவார் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ‘மிஃராஜ்’ இரவில், ‘புராக்’ வாகனத்தில் தூதர் முஹம்மது பயணமானது, இதைத்தானே சொல்கிறது?

8.அதோடு, கல்கி அவதாரத்துக்கு இறைவனின் உதவி பெருமளவில் இருக்கும் எனவும், இறைவனால் வலுவூட்டப்படுவார் எனவும் புத்தகங்களில் வந்துள்ளது. முஹம்மதுக்கு, பத்ரு போர்க்களத்தில், இறைவனின் உதவி நேரடியாக தன் ஏவலர்கள் மூலம் இறங்கியது நம் எல்லாருக்கும் தெரிந்த விஷயம் தான்.

9.மேலும் சில விஷயங்கள் வேதங்களில் குறிப்பிடப்படுகின்றன. அதாவது, கல்கி அவதாரம், குதிரையேற்றத்திலும், அம்பெய்துவதிலும், வாள் பயிற்சியிலும் சிறந்து விளங்குவார். இந்த இடத்தில், பண்டிட் வைத் ப்ரகாஷ் என்ன சொல்கிறார் என்பது, அதி முக்கியமான, கவனத்தில் கொள்ளத் தக்க விஷயமாகும். அதாவது, குதிரை, வாள் மற்றும் ஈட்டிகளின் காலம் வெகு நாட்களுக்கு முன்பே போய் விட்டது, தற்போது, நவீன ஆயுதங்களான, துப்பாக்கிகள், பீரங்கிகள், ஏவுகணைகள் என போர்முறை முற்றிலும் மாறி விட்டது. அதனால், வாளுடனும் வில்லுடனும் போராடக்கூடிய கல்கி இனிமேல் அவதாரமெடுப்பார் என்று இனியும் நம்பிக்கொண்டிருப்பது அர்த்தமற்றது. உண்மையில், வேதங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் கல்கி அவதாரம் என்பது, புனித குர்ஆன் வழங்கப்பட்ட தூதர் முஹம்மதேயன்றி வேறில்லை என்பது மிகத் தெளிவாக தெரிகிறது

பர்லு தொழுகைக்குப் பிறகு கூட்டு துஆ

நபி (ஸல்) அவர்களும் அவர்களின் கலீபாக்களும், மற்றும் சஹாபாக்களும் பர்லு தொழுகைக்குப் பிறகு கூட்டாக துஆ ஓதியதற்கு எவ்வித ஆதாரமுமில்லை. அதாவது இமாம் துஆ ஓத மற்றவர் "ஆமீன் ஆமீன்" என்று கூறும் நிலை (இன்று நமது பகுதிகளில் நடைமுறையில் இருப்பது போல்) அவர்கள் காலத்தில் கிடையாது.
நம்மைவிட துஆ கேட்கும் வகையில் பன்மடங்கு ஆர்வம் கொண்டுள்ள நபி அவர்களும், அவர்களின் உத்தம ஸஹாபாக்களும் ஒரு நேரத் தொழுகையிலும் கூட இமாம் துஆ ஓத, மற்றவர் ஆமீன் கூறும் அமைப்பில் இருந்ததற்கான எந்த ஒரு ஆதாரமும் ஹதீஸ்களில் கிடையாது. மாறாக நபி அவர்களும், சஹாபாக்களும் ஜமாஅத் முடிந்தவுடன் தனித்தனியே துஆ ஓதியுள்ளார்கள் என்பதையே ஹதீஸ்களின் வாயிலாக அறிய முடிகிறது.

நபி (sal) அவர்கள் தொழுகையிலிருந்து திரும்பிவிட்டால் "மும்முறை" أأَسْتَغْفِرُ اللهَ

அஸ்தஃபிருல்லாஹ்" என்று (கூறி) பாவமன்னிப்புத் தேடுவார்கள்.

(பின்னர்)

اللَّهُمَّ أَنْتَ السَّلأمُ وَ مِنْكَ السَّلأمُ تَبَارَكْتَ يَا ذَا الْجَلاَلِ وَ الإِكْرَم

"அல்லாஹும்ம அந்த்தஸ்ஸலாம் வமின்கஸ் ஸலாம் தபாரக்த்த யாதல் ஜலாலி வல்இக்ராம்" என்று ஓதுவார்கள். என்று ஸவ்பான் (ரழி) அறிவித்துள்ளார்கள். (நூல்:முஸ்லிம், திர்மிதீ, இப்னுமாஜ்ஜா, அஹ்மத்)
பொருள்:யா அல்லாஹ்! நீயே சாந்தியானவன். மேலும் உன்னிடமிருந்தே சாந்தி பிறக்கிறது கண்ணியமும், மகத்துவமும் மிக்கவனாகிய நீயே மிக மேலானவனாகும்.
மேற்காணும் துஆவை நபி (ஸல்) அவர்கள் தாம் தொழ வைத்துவிட்டுத் தனித்த நிலையில் ஓதினார்களே அன்றி அவர்கள் தொழ வைத்தபின் ஓதிய துஆக்களுக்கு எந்த ஸஹாபியும் ஆமீன் கூறினார்கள் என்பதை ஹதீஸ்களில் காணமுடியவில்லை.
ஆகவே நபி (ஸல்)அவர்கள் தனித்து ஓதியது போன்றே மற்ற ஸஹாபாக்களும் ஓதியிருப்பார்கள் என்பதை நம்மால் உணர முடிகிறது.

நபி ஸல்அவர்கள், உங்களில் ஒருவர் தொழுதுவிட்டால் அவர் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ ஆரம்பித்து, பின்னர் நபி அவர்கள் மீது ஸலவாத்தோதி, பிறகு அவர் தாம், நாடியவற்றை (அல்லாஹ்விடம் கேட்டுப்) பிரார்த்திப்பாராக! என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: ஃபுழாலத்து பின் உபைத்(ரழி) நூல்: திர்மிதீ)

நான் ஒரு முறை நபி (ஸல்)அவர்களுடன் அபூபக்கர் (ரழி), உமர் (ரழி) ஆகியோர் இருக்கும் போது தொழுது கொண்டிருந்தேன். நான் தொழுதுமுடித்து உட்கார்ந்தவுடன் அல்லாஹ்வை போற்றிப் புகழ ஆரம்பித்து, பின்னர் நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்து கூறிவிட்டுப் பின்னர் எனக்காக துஆ கேட்டுக் கொண்டிருந்தேன், அப்போது நபி (ஸல்)அவர்கள் நீர் கேளும்! தரப்படும் என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ்பின் மஸ்ஊத்(ரழி) நூல்:திர்மிதீ)

அல்லாஹ்வின் தூதரே! (அல்லாஹ்விடம்) மிகவும் ஏற்று கொள்ளப்படுவதற்கு தகுதிவாய்ந்த துஆ (வின் நேரம்) எது? என்று கேட்கப்பட்டது. அதற்கவர்கள், கடைசி இரவின் நடுப்பகுதியும், பர்லான தொழுகைகளுக்குப் பிறகும் என்றார்கள். (அபூ உமாமா(ரழி) திர்மிதீ)

மேற்காணும் ஹதீஸ்களின் வாயிலாக பர்லான தொழுகைகளுக்குப் பிறகுள்ள நேரம் துஆ கபூலாகக்கூடிய நேரம் என்பதையும் நமது தேவைகளை நாமே கேட்டுப்பெற முயற்சிக்க வேண்டும் என்றும் நபி (ஸல்) அவர்கள் தமது ஸஹாபாக்களுக்கு கற்றுக்கொடுத்துள்ளார்கள் என்பதையும் அறிகிறோம்.

இமாம் சூரத்துல் ஃபாத்திஹா ஓதி முடித்தவுடன் நீங்கள் அனைவரும் ஆமின் கூறுங்கள்! நீங்கள் கூறும் ஆமீன் மலக்குகளின் ஆமீனுக்கு ஒத்தாக அமைந்து விட்டால் உங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடும் என்று தமது ஸஹாபாக்களுக்கு ஆமீன் கூறும்படி ஆர்வ மூட்டிய நபி (ஸல்)அவர்கள் பர்லான தொழுகைகளுக்குப் பிறகு நான் மட்டும் துஆ ஓதுகிறேன் நீங்கள் அனைவரும் நான் ஓதும் துஆவுக்கு ஆமீன் சொல்லிக்கொண்டிருங்கள் என்று ஒருபோதும் ஒரு வார்த்தைகூட அவர்கள் கூறியதாக சரித்திரமே இல்லை. இவ்வாறு எந்த ஸஹாபியும் தாம் மக்களுக்குத் தொழவைத்த பின் அவர்கள் துஆ ஓத மக்கள் ஆமீன் கூறினார்கள் என்று ஹதீஸ் நூல்களில் காணப்படவில்லையே என்று தான் ஹதீஸ் கலா வல்லுனர்கள் கேட்கிறார்கள். இமாம் துஆஓத பின்பற்றி தொழுதவர்கள் ஆமீன் ஆமீன் என்று கூறுவது நல்லது தானே இவ்வாறு செய்தால் என்ன தவறு? என்று பலர் கருதுகிறார்கள். நல்லது தானே என்று கூறுபவர்கள் அந்த நல்லதை நபி அவர்கள் நமக்கு காட்டித் தராமல் சென்று விட்டார்கள் என்று சொல்லாமல் சொல்கிறார்கள்.

ஒன்றை நல்லதுதான் என்று நாமாகக் கருதிக் கொண்டு எதையும் செய்துவிட்டுப் போவதா? மார்க்கத்தில் நல்லதென்று ஒன்றிருக்குமானால், அது நபி(ஸல்) அவர்கள் கூறிய, அல்லது செய்து காட்டிய, அல்லது அங்கீகாரம் செய்த ஒன்றாகத்தான் அது இருக்க வேண்டுமே அன்றி, நாமாக நடைமுறை படுத்தினால் நல்லதாகிவிட முடியாது.

உங்களை நரகத்தை விட்டும் தூரப்படுத்தி, சுவர்க்கத்தின் பக்கம் உங்களை அணுகச் செய்யும் (எந்த ஒரு நன்மையும் தீமையும்) உங்களுக்குத் தெளிவுபடுத்தப்படாது ஒரு விஷயமும் விடுபட்டு விடவில்லை என நபி அவர்கள் கூறினார்கள். (அபூதர்ரு(ரழி) நூல்: தப்ரானி)

"நபித்தோழர்கள் செய்யாத வணக்க வழிபாடுகள் எதனையும் செய்யாதீகள். முன்சென்றவர்கள் பின் சென்றவர்களுக்கு எதனையும் விட்டு வைக்கவில்லை" என ஹுதைபா(ரழி) அறிவித்துள்ளார்கள்." அல்லாஹ்வின் ஏவல்களைக் கொண்டும், நபி (ஸல்)அவர்களின் நடை முறைகளைக் கொண்டும் மார்க்கத்தை போதுமாக்கிக் கொள்ளுங்கள். அதன் பின்னால் வந்தவர்கள் ஏற்படுத்திய புதுமை(பித்அத்)களை விட்டு விடுமாறு எச்சரிக்கை செய்கிறேன்." என தாபியீன்களின் தலை சிறந்தவரும், சீரிய கலீபஃபாவுமான இப்னு அஜீஸ்(ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

October 12, 2009

ஈமான் என்றால் என்ன?

ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், "ஈமான் (இறை நம்பிக்கை) என்றால் என்ன?" என்று வினவினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "ஈமான் என்பது அல்லாஹ்வையும் அவனுடைய மலைக்குமார்களையும் அவனுடைய வேதங்களையும் அவனுடைய தூதர்களையும் இன்னும் மறுமை நாளையும் நீங்கள் நம்புவதாகும். நன்மை, தீமைகள் யாவும் அல்லாஹ்வின் (நாட்டமாகிய) விதியின்படியே நடக்கின்றன என்றும் நீங்கள் நம்பிக்கை கொள்வதாகும்" என்று கூறினார்கள். அறிவிப்பாளர்:உமர் (ரலி)
நூல்:முஸ்லிம் 9