October 30, 2009

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் உங்களுக்கு மிகச் சிறந்த தர்மம் ஒன்றைக் கூறட்டுமா? அது, தனக்குப் பொருளீட்டி உணவளிக்கக்கூடியவர் வேறு எவருமில்லை என்ற நிலையில் உன் பக்கம் அனுப்பப்பட்ட உன் மகள்தான். ; ( இப்னு மாஜா)

நான் அண்ணலாரிடம் கேட்டேன்: எனக்கும் இரண்டு அண்டை வீட்டுக்காரர்கள் உள்ளனர். அவர்களில் எவருக்கும் நான் அன்பளிப்பு அனுப்புவது? ; அண்ணலார் பதிலளித்தார்கள். எவருடைய வாசல் உன் வாசலுக்கு மிக அருகில் உள்ளதோ அந்த அண்டைவீட்டுக்காரருக்கு! அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி) (புகாரி)


நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்: உங்களில் ஒருவரின் பணியாள் உணவு சமைத்து, அந்த உணவைச் சமைப்பதற்காக வெப்பம், புகை ஆகிய சிரமங்களைச் சகித்துக் கொண்டு, அந்த உணவை அவரிடம் கொண்டு வருகிறான் எனில், எஜமான் அவனைத் தன்னுடன் உட்கார வைத்துக்கொண்டு (இருவரும் சேர்ந்து) உண்ணட்டும்! உணவு குறைவாக இருந்தால், அதிலிருந்து ஒரு கவளம் அல்லது இரண்டு கவளம் அவனுடைய கையில் விடட்டும்! அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) (முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரர் ஆவார். அவர் தன் சகோதரனுக்குக் கொடுமை புரிவதுமில்லை, அவனை ஆதரவின்றி விட்டு விடுவதுமில்லை. எவர் தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்கின்றாரோ அவரது தேவையை அல்லாஹ் நிறைவு செய்கின்றான். எவர் ஒரு முஸ்லிமின் துன்பத்தை நீக்குகின்றாரோ மறுமைநாளில் அல்லாஹ் அவருடைய துன்பத்தை நீக்குவான். எவர் ஒரு முஸ்லிமின் குறையை மறைக்கின்றாரோ மறுமைநாளில் அல்லாஹ் அவருடைய குறைகளை மறைப்பான். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) (புகாரி, முஸ்லிம்)

No comments:

Post a Comment