February 7, 2010

தொடர்....

அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்,
"அவன்தான் (பூமியையும்) பூமியிலுள்ள யாவற்றையும் உங்களுக்காகப் படைத்தான்,மேலும்,அவன் வானத்தைப் படைக்கக்கருதி (ய போது) அவைகளை ஏழு வானங்களாகவும்,அமைத்தான்.அன்றி, (அவற்றிலுள்ள) யாவற்றையும் அவன் நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான்." அல்குரான் 2:29
அல்லாஹ் ,நீங்கள் கேள்வியில் கூறியபடியே தனது திருமறையிலும் கூறுகின்றான்....உங்களின் கேள்வியின் சாராம்சம், ஏன் எல்ல மனிதர்களையும் ஒரே மார்க்கத்தில் நிலை நிறுத்தவில்லை என்பது...
அல்லா ஆரம்பத்தில் மனிதனை படைக்க எண்ணிய போது ...
திருமறை கூறுகின்றது...
"(நபியே!) உமதிறைவன் மலக்குகளை நோக்கி, "நான் பூமியில் (என்னுடைய) பிரதிநிதி (-ஆதமை) நிச்சயமாக அமைக்கப் போகிறேன், ""எனக்கூறிய சமையத்தில் (அதற்கு) அவர்கள், "(பூமியில்) அழிம்பு செய்து இரத்தம் சிந்தக் கூடிய ( சந்ததிகளைப் பெரும்)அவரை,அதில் (உன்னுடைய பிரதிநிதியாக)ஆக்குகிருய? நாங்களோ, உன்னுடைய பரிசுத்தத் தன்மையைக் கூறி உன்னுடைய புகழைக் கொண்டு உன்னைத் துதிசெய்து கொண்டிருக்கிறோம்,"என்று கூறினார்கள்.(அதற்க்கு இறைவன்) "நீங்கள் அறியாதவர்ரைஎல்லாம் நிச்சயமாக நான் நன்கறிவேன்" என கூறி விட்டான். அல் குரான் 2:30
ஆக,மேற்கண்ட ஆயத்தின் வசனக் கூற்றுப்படி,மனிதன் அழிம்பு செய்யக்கூடியவன்,இரத்தம் சிந்தக் கூடியவன்,வழிதவற கூடியவன் என்பதை மலக்குகள் அறிந்திருப்பதால்தான் ,அல்லாஹ் மனிதனை படைக்க எண்ணி அதுப்பற்றி மலக்குகளிடம் கூறும்போது அவர்கள் மேற்கண்ட வாறு இறைவநிதம் கேட்கின்ரனை...ஆகவே மனிதனை இறைவன் படைத்து அறிவைக் கொடித்த்தாலும்,எல்லோரும் ஒரே மார்க்கத்தை பெறக் கூடிய சூழ்நிலை இல்லாமலேயே இறைவன் வைத்துள்ளான்....
மேலும்,இறைவன் ஆதமை படைத்து அவரின் ஜோடியான ஹவ்வாவைப் படைத்து இருவரையும் சுவனத்தில் தாமதப்படுத்தி, அவர்களுக்கு நல்வாழ்வு கொடுத்தபோது ,இப்லீஸ் சூழ்ச்சி செய்து அவ்விருவரையும் கெடுத்து வழிதவற வைத்துவிட்டான்...அதனால் அவர்கள் அல்லாஹ்வின் கோபத்திர்க்குள்ளாகி சுவனத்திலிருந்து இறக்கிவிடப்பட்டனர்.பிறகு இறைவனிடத்தில் சில சொற்களைக் கற்று அவனின் மன்னிப்பையும் பெற்றனர் ,இதிலிருந்து என்ன தெரிகின்றது முதல் மனிதர் ஆதம் ஹவ்வாவே,வழித்தவறி இருக்கும்போது,இறைவனின் நேரிடை உபதேசத்தைக் கேட்டவர்களே வழிதவறி இருக்கும்போது இப்போதுள்ள மக்கள் அன்றி தொடரும் மக்கள் வழித்தவறுவது மிகவும் ஆச்சர்யம் அல்ல...(இன்ஷா அல்லாஹ் நாளை தொடரும்)

No comments:

Post a Comment