February 13, 2010

தொடர்...

மேலும் அல்லாஹ் கூறுகிறான்,
ஆதமுடைய மக்களே!ஷைத்தான் உங்கள் பெற்றோரை (அவர்கள் இன்பமுடன் வசித்து வந்த ) சோலையிலிருந்து வெளியேறி (துன்பத்திற்குள்ளாகி)ய பிரகாரம்,உங்களையும் துன்பத்திற்குள்ளாகி விட வேண்டாம்.அவர்களுடைய மானத்தை அவர்களுக்கு காண்பிக்கும் பொருட்டு ,அவன் அவர்களுடைய ஆடைகளை களைந்து விட்டான்.நிச்சயமாக அவனும் அவனுடைய இனத்தாரும் நீங்கள் அவர்களைக் காணமுடியாதவாறு (மறைவாக இருந்து கொண்டு) உங்களை (வழிகெடுக்க சமயம்) பார்த்து கொண்டிருக்கின்றார்கள்.நிச்சயமாக விசுவாசம் கொள்ளாதவர்களுக்குத் தான் ,அந்த ஷைத்தான்களை நாம் நண்பர்கலாக்குகின்றோம். அல்குரான் 7:27-சிகரம்

மனிதர்களுக்கு ,இந்த உலகத்தில் ஷைத்தானின் பின் சென்று வழிகெட்டுவிடாமல் இருக்கும்படி தன் அருள்மறையில் இறைவன் பல இடங்களில் எச்சரிக்கை செய்கின்றான் இருந்தாலும் மக்கள் வீண் சந்தேகங்களுக்கு உள்ளாகி அவர்களில் பெரும்பாலோர் வழி தவறிவிடுகின்றனர்.ஆகவே,இறைவன் மனிதனை முதன் முதலில் தன் மார்க்கத்திலேயே உள்ளாகி பிறப்பிக்க வைத்தாலும் நாலாம் வட்டத்தில் அவர்கள் பல்கி,பெருகி பல பாகங்களிலும் பரவும் போது ...அவர்களின் எண்ணங்கள் பலவாறுக பெருகி,முன் கண்ட உண்மைகள் மறந்து பொய் வீண் சந்தேகங்களுக்கு உள்ளாகி பல பிரிவுகளாக பிரிந்து விடுகின்றனர். (இன்ஷா அல்லாஹ் தொடரும்) binthi AMEER.

No comments:

Post a Comment