May 12, 2009

திருக்குர்ஆனில் உள்ள 114 அத்தியாயங்களின் ஆரம்பத்தில் பிஸ்மில்லாஹ் உள்ளது. 9வது அத்தியாத்தில் மட்டும் பிஸ்மில்லாஹ் இல்லை! ஏதாவது தனிப்பட்ட காரணமுள்ளதா?

நபி (ஸல்) அவர்கள் காலத்திலேயே குர்ஆன் வசங்கள் இறக்கப்பட்டதும் எழுதி வைத்துக்கொள்ள ஜைதுபின் தாபித், உபைஇப்னுகஃபு (ரலி) போன்ற நபித்தோழர்கள் இருந்திருக்கிறார்கள்.
ஒவ்வொரு வருடமும் நபி(ஸல்) அவர்கள் ரமழானில் இஃதிகாஃபில் இருக்கும்போது ஒரு தடவை குர்ஆன் வசனங்களை வரிசையாக ஜிப்ரயீல் (அலை) அவர்களிடம் ஓதி காட்டியிருக்கிறார்கள்.
ரசூல்(ஸல்) அவர்களின் மரணத்திற்கு முந்திய ரமழானின் இஃதிகாஃபில் இரு தடவைகள் ஓதிகாட்டியிருக்கிறார்கள்.
இச்செய்திகளை அபூஹுரைரா(ரலி), அனஸ்(ரலி) போன்ற நபித்தோழர்கள் அறிவிப்பதாக புகாரி, அபூதாவூத், திர்மிதீ, இப்னு மாஜ்ஜா, அஹ்மத் போன்ற ஹதீஸ் நூல்களில் காணமுடிகின்றது.
அதே ஜைது இப்னு தாபித் (ரலி) அவர்கள் தான் பின் குர்ஆனை முழுமையாக ஒரே நூலாக தொகுக்க அபூபக்கர்(ரலி) நியமித்த குழுவின் தலைமையேற்றியிருக்கிறார்.
நபி(ஸல்) அவர்களின் தலைமை எழுத்தாளராக இருந்த ஜைது(ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் எங்கெல்லாம் பிஸ்மில்லாஹ் கூறி ஆறம்பித்தார்களோ அங்கெல்லாம் பிஸ்மில்லாஹ் எழுதினார்கள்.
9வது அத்தியாத்தை பிஸ்மில்லாஹ் கொண்டு ஓதவில்லை. எனவே அங்கு பிஸ்மில்லாஹ் இடம்பெறவில்லை.எனவே இதன் அடிப்படயில்தான் இன்று வரை எல்லா மொழிகளிலும் அச்சடிக்கப்படும் குர்ஆனிலும் மூல அரபி மொழியிலும் பிஸ்மில்லாஹ் என்ற வாசகம் இடம்பெறவில்லை. இந்த ஒன்றைத் தவிர வேறு எந்த தனிப்பட்ட காரணம் இல்லை. அல்லாஹ் மிக அறிந்தவன்.

No comments:

Post a Comment