May 12, 2009

அல்லாஹ்வும், அவனது வானவர்களும் நபியின் மீது ஸலவாத்துச் சொல்கிறார்கள்.(33:56) அப்படி என்றால் அல்லாஹ் ஸலவாத் கூறுகிறான் என்பதின் பொருள் என்ன?

நிச்சயமாக அல்லாஹ்வும், அவனது வானவர்களும் நபியின் மீது ஸலவாத்துச் சொல்கிறார்கள். (எனவே) விசுவாசிகளே! நீங்களும் அவர்மீது ஸலவாத்துச் சொல்லி ஸலாமும் பகருங்கள். (அல்குர்ஆன் 33:56)

அல்லாஹ் நபியவர்களின் மீது ஸலவாத் கூறுகிறான் என்றால் அவர்கள் மீது அருள் புரிகிறான் என்பது பொருள். மலக்குகளும், மனிதர்களும் ஸலவாத்துக் கூறுகிறார்கள் என்றால் அவர்கள் நபி(ஸல்) அவர்கள் மீது அருள் புரியும்படி அல்லாஹ்விடம் துஆ செய்கிறார்கள் என்பது பொருளாகும். அல்லாஹ் மிக அறிந்தவன்.

No comments:

Post a Comment