May 12, 2009

பழிக்குப்பழி வாங்க மார்க்கத்தில் அனுமதியுண்டா?

உயிருக்கு உயிர், கண்ணுக்கு கன், மூக்குக்கு மூக்கு, காதுக்கு காது, பல்லுக்கு பல் ஆகவும் காயங்களுக்கு (சமமான) காயங்களாகவும், நிச்சயமாக பழி வாங்கப்படும் என்று விதித்திருந்தோம். எனினும் ஒருவர் (பழி வாங்குவதை) தர்மமாக விட்டு விட்டால் அது அவருடைய பாவங்களுக்குப் பரிகாரம் ஆகும். (திருக்குர்ஆன் 5:45)

பழிக்குப்பழி வாங்க வேண்டுமென்ற சராசரி மனித உணர்வுகளுக்கு மதிப்பளித்த அல்லாஹ், பழிக்கு பழி வாங்குவதை மேலே கண்ட வசனத்தில் அனுமதிக்கிறான். இருப்பினும் சிறப்பானது மன்னித்து மறந்து விடுவதுதான் எனவும் எடுத்துரைக்கிறான் அல்லாஹ். அல்லாஹ் மிக அறிந்தவன்.

No comments:

Post a Comment