May 12, 2009

காதணிகள் அணியக்கூடாது என்று சிலர் கூறுகிறார்களே சரியா?

ஒரு முறை இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் நபி(ஸல்) ஆவர்களுடன் நீங்கள் பெருநாளில் இருந்துள்ளீர்களா? என்று கேட்கப்பட்டது. அப்போது அவர்கள் 'ஆம்' என்று கூறிவிட்டு நபி(ஸல்) அவர்கள் பெருநாளன்று புறப்பட்டு (பெருநாள் தொழுகையை) தொழுதார்கள். பின்னர் குத்பா - பிரசங்கம் செய்தார்கள். ஆனால் பாங்கு, இகாமத், எதுவும் சொல்லவில்லை. பின்னர் பெண்கள் பகுதிக்கு வந்து அவர்களுக்கு உபதேசம் செய்துவிட்டு அவர்களை ஸதகா தர்மம் செய்யும்படி ஏவினார்கள். அப்போது அப்பெண்கள் தமது காதுகளிலும், கழுத்துகளிலும் உள்ளவற்றைக் குனிந்து கழற்றி பிலால்(ரலி) அவர்களிடம் கொடுத்தார்கள். பிறகு அவர்களும் பிலால்(ரலி) அவர்களும் அவர்களின் வீட்டுக்கு எடுத்துச் சென்று விட்டார்கள். (இப்னு அப்பாஸ்(ரலி) புகாரீ, முஸ்லிம்)

புகாரியின் அறிவிப்பில் அப்பெண்கள் தமது காது வாலிகளையும் மோதிரங்களையும் கழற்றி கொடுத்தார்கள் என்பதாக உள்ளது. ஆகவே மேற்காணும் ஸஹீஹான ஹதீஸ்களில் சஹாபா பெண்கள் தமது காதுகளை குத்தி வாலி போட்டிருந்தார்கள் என்பதை அறிகிறோம். இதனை அடிப்படையாகக் கொண்டு காதணிகள் அணிபவர்களை நாம் தடை செய்ய முடியாது என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது. அல்லாஹ் மிக அறிந்தவன்.

No comments:

Post a Comment