May 12, 2009

மழை வந்தால் பலர் சனியன் பிடித்த மழை விட மாட்டேங்குதே என்று கூறுகிறார்களே இவ்வாறு கூறலாமா?

மனிதர்களில் பலர் குறிப்பாக முஸ்லிம்கள் கூட இறைவனின் அருட்கொடைகளைப் போற்றி புகழாது நன்றி கெட்டவர்களாகவே உள்ளனர். மேலும் தாங்கள் கூறியபடி மழையை பழிக்கும் புத்தி உடையவர்களாகவும் உள்ளனர்.
அவர்கள் (இதையும்) கவனிக்கவில்லையா - நிச்சயமாக நாமே வரண்ட பூமியின் பக்கம் மேகங்கள் மூலமாக தண்ணீரை ஓட்டிச் சென்று அதன் மூலம் இவர்களும் இவர்களுடைய கால் நடைகளும் உண்ணக்கூடிய பயிர்களை வெளிப்படுத்துகிறோம்; அவர்கள் (இதை) நோட்ட மிட வேண்டாமா? (அல்குர்ஆன் 32:27)

வெயிலும் மழையும் காற்றும் இன்ன பிற வஸ்துகளும் மனிதனது நலனுக்காகவே வல்ல அல்லாஹ்வால் அருளப்படுகின்றன. இவ்வருட்கொடையை பழிப்பது மாபெரும் தவறு. நமக்கு நாமே நாசத்தை தேடிக்கொள்ளூம் வழி. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மழை பெய்வதைப் பார்த்தால் "அல்லாஹும்ம ஸய்யிபன் நாஃபியா" - யா அல்லாஹ் பலன் தரும் மழையை பொழிய வைப்பாயாக! என்று ஓதுவார்கள் என ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இச்செய்தி புகாரியில் இடம்பெற்றுள்ளது. ஆகவே நாம் பழிப்பதை தவிர்த்து பலன் தரும் துஆக்களை கேட்போம்.

No comments:

Post a Comment