May 12, 2009

அல்லாஹ்வுக்காக ஒரு முஸ்லிமை வெறுத்து ஒதுக்கலாமா?

எவர் அல்லாஹ்வுக்காக நேசித்து, அல்லாஹ்வுக்காக வெறுத்து, அல்லாஹ்வுக்காக கொடுத்து, அல்லாஹ்வுக்காக கொடுக்க மறுத்து விடுகிறாரோ அவர் ஈமானை நிறைவு செய்து விட்டார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அபூ உமாமா(ரலி), அபூதாவூத், திர்மிதீ

மேற்கானும் ஹதீஸின்படி ஒரு முஸ்லிமை, வெறுப்பதும், அவருக்கு எதுவும் கொடுக்காமல் இருப்பதும் சரி என்பதாக தெரிந்தாலும், தொடர்ந்து இந்த நிலை நீடிப்பதை நபி(ஸல்) அவர்களின் கீழ்காணும் ஹதீஸ் தடை செய்கிறது.

ஒருவர் தனது சகோதரரை மூன்று தினங்களுக்கு அதிகமாக வெறுத்திருப்பது முறையாகாது. இருவரும் சந்தித்துக் கொள்ளும்போது இவரை விட்டு அவரும், அவரை விட்டு இவரும் முகம் திருப்பிக் கொள்கின்றனர். இவ்விருவரில் சிறந்தவர் (மற்றவருக்கு) ஸலாம் கூற முந்துபவரேயாவர் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூ அய்யூபுல் அன்ஸாரி (ரலி), புகாரி, முஸ்லிம் அல்லாஹ் மிக அறிந்தவன்.

No comments:

Post a Comment