May 12, 2009

மரணத்தை ஆசிப்பது தவறு என்று கூறப்படுகிறதே. ஆனால் சில சந்தர்ப்பங்களில் அவ்வாறு ஆசிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறதே என்ன செய்வது?

உங்களில் எவரும் மரணத்தை ஆசிக்க வேண்டாம். நல்லவராயிருப்பினும் அவர் நற்காரியத்தை அதிகம் தேடிக்கொள்ளும் வாய்ப்பிருக்கிறது. தீயவராயிருப்பின் அல்லாஹ்விடம் 'தவ்பா' செய்து அவனது பொருத்தத்தை அடைய ஏதுவிருக்கிறது என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அபூஹுரைரா(ரலி), புகாரி

உங்களில் எவரும் தமக்கு ஏற்பட்டுள்ள கஷ்டத்தின் காரணமாக ஆசிக்க வேண்டாம். அவ்வாறு நிர்ப்பந்த நிலை ஏற்ப்பட்டு கேட்க வேண்டுமாயின் பின்வருமாறு கேட்பாராக! யாஅல்லாஹ்! எனக்கு வாழ்க்கை சிறப்புடையதாயிருக்கும் வரை என்னை வாழச் செய்வாயாக! என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அனஸ்(ரலி), புகாரி, முஸ்லிம்)

ஆகவே மேற்காணும் ஹதீதுகளின் அடிப்படையில் மரணத்தை ஆசிப்பது தவறு என்பதை அறிகிறோம். ஆகையால் மரணம் வருவதை எதிர்பார்த்துக்கொண்டு அதற்காக முற்கூட்டியே நல்ல அமல்கள் செய்து கொள்வது வரவேற்புக்குரியதாகும்.

No comments:

Post a Comment