May 12, 2009

மார்க்கத்தில் சில காரியங்களை பித்அத் என்கிறார்கள். 'பித்அத்' என்றால் என்ன?

மார்க்க வணக்க வழிபாடுகளில் புதியதாக ஒன்றைச் செய்வதே புதுமை 'பித்அத்' ஆகும். இறை நெருக்கம் பெற்று இம்மை மறுமையில் ஈடேற்றம் பெருவதற்கான வழிகளை வல்ல அல்லாஹ்வும் நாம் உயிரினும் போற்றும் நபி (ஸல்) அவர்களும் மிகத் தெளிவாக நமக்குக் காட்டித் தந்துள்ளார்கள். அல்லாஹ்வால் நிறைவு செய்யப்பட்ட இம்மார்க்கத்தில் அவனது தூதர் (ஸல்) அவர்கள் வெள்ளை வெளேர் என்று விட்டுச் சென்ற மார்க்கத்தில், மனிதர்கள் தங்களது யூகங்களையும் பொய்யான கற்பனைகளையும் புகுத்துவதைப் 'பித்அத்' என்றும், இது நம்மை பல வழிகேடுகளில் இட்டுச் சென்று நரகத்தில் தள்ளும் எனவும் நபி (ஸல்) அவர்கள் மிகத் தெளிவாக எச்சரித்துள்ளார்கள்.

"வார்த்தையில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம். நடைமுறையில் சிறந்தது முஹம்மத் (ஸல்) அவர்களின் நடமுறை. காரியங்களில் கெட்டது (பித்ஆத்) புதுமையாகும். பித்அத்துகள் அனைத்தும் வழிகேடு; வழிகேடுகள் அனைத்தும் நரகில் சேர்க்கும்" (இப்னு மஸ்வூத் (ரலி), ஜாபிர் (ரலி) புகாரி, முஸ்லிம், நஸயி.

மார்க்கத்தை பிழைப்பாக ஆக்கிக் கொண்ட மவ்லவிகள் மார்க்கத்தில் இல்லாத 'பித்அத்' பலவற்றை மார்க்கமாக்குவதற்கு அவர்களாக அவர்கள் இஷ்டத்திற்கு 'பித்அத் ஹஸனா' அழகிய பித்அத் என்றும் 'பித்அத் ஸஸ்யிஆ' கெட்ட பித்அத் என்றும் இரண்டாகப் பிரித்தும் பிழைப்புக்காக உண்டாக்கியுள்ளனர். மற்றபடி மார்க்கத்தில் நுழைக்கக் கூடிய 'பித்அத் ஹஸனா' ஒன்றும் இல்லை. "எவர் எம்மால் ஏவப்படாத அமல்களைச் செய்கின்றாரோ, அவை அல்லாஹ்விடத்தில் மறுக்கப் பட்டவையாகும். அவை நூறு ஷரத்துகளாயினும் சரியே" என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். (புகாரீ, முஸ்லிம்)அல்லாஹ் மிக அறிந்தவன்

No comments:

Post a Comment