May 12, 2009

இஸ்லாத்தில் ஒரு மனிதனுக்கு கெட்ட காலம் என்றும் நல்ல காலம் என்றும் உள்ளதா?

காலத்தில் நல்ல நேரம், கெட்ட நேரம் என்பது இல்லை. நல்ல நேரம் என்று கருதுகிற நேரத்தில் கெட்ட விஷயங்களும் நடக்கின்றன.இஸ்லாத்தில் நல்ல காலம் கெட்ட காலம் என்பது அறவே கிடையாது. எல்லாம் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடக்கும். திருமறை குர்ஆன் கூறுகிறது:
வானங்களிலும், பூமியிலுள்ளோர் அனைவரும் (தங்களுக்கு வேண்டியவற்றை) அவனிடமே கேட்கின்றனர். ஒவ்வொரு நாளிலும் அவன் (அல்லாஹ்) காரியத்திலேயே இருக்கிறான். (அல்குர்ஆன் 55:29)

இக்கருத்தினை விளக்கும் முகமாக ரசூல் (ஸல்) அவர்கள் மனித இனம் முழுமைக்கும் அறிவுரைக் கூறுகிறார்கள்:
காலத்தை நேரத்தை ஆதத்தின் மகன் திட்ட வேண்டாம். ஏனெனில் நானே அதனை நிகழச் செய்கிறேன். இரவையும் பகலையும் அனுப்பி வைக்கிறேன். நான் விரும்பினால் அதனை பற்றிக் கொள்வேன். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரி முஸ்லிம், அபூதாவூத்

இந்நபி மொழியில் இரவு பகல் என்பதை நல்லது கெட்டது, சுகம், துக்கம் என்ற கருத்துக் கொள்ளவும் இடம் உண்டு. எனவே நல்லதும் கெட்டதும் அல்லாஹ்வின் தனிச் சட்டத்தில் உருவாவது என்பதே ஈமானின் ஒரு விதி என்பதை எல்லா முஸ்லிம்களும் அறிவர். இதனை நாம் "வல் கத்ரி கைரிஹி வ ஷர்ரிஹி மினல்லாஹி தஆலா" எனக் கூறுகிறோம்.

No comments:

Post a Comment