May 12, 2009

திருஷ்டிக்காக அல்லது கைகால் வலி நீங்குவதற்காக ஓது முடிச்ச கருப்புக்கயிற்றை கட்டிக்கொள்ளலாமா?

திருஷ்டிக்காக அல்லது கைகால் வலி நீங்குவதற்காக ஓது முடிச்ச கருப்புக்கயிற்றை கட்டிக்கொள்ள மார்க்கத்தில் அனுமதியில்லை.

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்(ரலி) அவர்களின் துணைவியார் ஜைனபு(ரலி) அவர்கள் கூறுகிறார்கள். ஒரு முறை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்(ரலி) அவர்கள் எனது கழுத்தில் ஓர் கயிற்றை கண்டு இது என்ன? என்றார்கள். இது எனக்காக மந்திரித்த கயிறு என்றேன். உடனே அவர்கள் அதைப்பிடித்து அறுத்துவிட்டு, நீங்கள் அப்துல்லாஹ் (வாகிய என்னுடைய) குடும்பத்தார் ஷிர்க்கை விட்டும் வெகு தூரத்திலுள்ளவர்கள். நிச்சயமாக மந்திரமும், திருஷ்டிக்காக மந்திரித்த கயிறும், சூனியம் செய்தல் ஆகியவை அனைத்தும் ஷிர்க்கு என்று நபி(ஸல்) அவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன் என்றார்கள்....(அபூதாவூத்)

மேற்காணும் ஹதீஸிலிருந்து குணத்தை நாடி உடம்பில் கறுப்பு கயிற்றை மந்திரித்து கட்டுவதெல்லாம் இஸ்லாத்திற்கு புறம்பானதாகும். அல்லாஹ் மிக அறிந்தவன்.

No comments:

Post a Comment